வவுனியா வடக்கில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி, சுகாதாரத் தரப்புக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கில் வீதி திருத்த பணியில் ஈடுபட்டவரிகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ள நிலையிலேயே, சுகாதாரத் தரப்பு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
வவுனியா வடக்கில் வீதி திருத்தப் பணியில் ஈடுபட்ட தனியார் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த ஊழியர்களில் மூவருக்கு, கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, தொடர்ச்சியான பிசீஆர் பரிசோதனைகளில் இதுவரை 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, அவர்களுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே வவுனியா வடக்கின் நயினாமடு, ஒலுமடு, நெடுங்கேணி சந்தி ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களைப் மூடி, சமூகப் பரவரை தடுக்க உதவுமாறு வவுனியா வடக்கு சுகாதார துறையினர் கோரிக்கை விடுத்துள்ளன