கிளிநொச்சி பளை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மீட்பு!

IMG 20201025 WA0025
IMG 20201025 WA0025

கிளிநொச்சி பளை முல்லையடி பகுதியில் மறைத்து வைக்க்பட்டிருந்;த மூன்று வாள்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பளை காவல்துறை யினரால் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இருந்து மேற்ப்படி வாள்கள் மீட்க்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஏ9 வீதிக்கு அருகாமையில் மின்சார இணைப்புக்களுக்காக அங்கு அடுக்கபட்டிருந்த மின்கம்பங்களுக்கு இடையில் பை ஒன்றில் சுற்ற்பட்ட நிலையில் குறித்த வாள்கள் மீட்க்பட்டுள்ளன.

அவை எதற்காக அங்கு மறைத்து வைக்க்பட்டது எனவும் யார் அவற்றை மறைத்து வைத்தார்கள் என்பது தொடர்பிலும் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள்னர்.

இதேவேளை குறித்த பகுதியில் அண்மையிலேயேமின் கம்பங்கள் அடுக்கி வைக்கப்பட்டதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஏதேனும் குற்ற செயலிற்கான திட்டமிடல்கள் இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கின்றனர்.