ஜனாதிபதியின் விசேட வீடமைப்பு திட்டமான உங்களிற்கு ஒரு வீடு நாட்டிற்கு எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் வவுனியா கருப்பனிச்சங்குளம் கிராம வாசி ஒருவருக்கு இன்று (25) வீடு கையளிக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஆறு இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த வீட்டினை வவுனியா தேசிய வீடமைப்பு திட்ட மாவட்ட அதிகாரி திருமதி குரூஸ் அவர்களினால் பயனாளிக்கு கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தேசிய வீடமைப்பு திட்ட மாவட்ட அதிகாரி திருமதி குரூஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.