இன்று (25) மாலை முதல் கொழும்பு கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நெடுந்தூர பேருந்துச் சேவைகளை நிறுத்துவதாக இலங்கை போக்குவரத்து சபையின் செயலாளர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
கோட்டை, புறக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இது தொடர்பில் நாளை மீண்டும் ஆலோசணைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.