மலையக மக்கள் முன்னணியின் தீர்மானம்!

25.01.2020 9 17
25.01.2020 9 17

20 ஆம் திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த் குமாருக்கு மலையக மக்கள் முன்னணி 14 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்வதற்காக மலையக மக்கள் முன்னணியின் மத்திய செயற்குழு கூட்டம் ஹட்டனில் இன்று கூடியது.

இதன்போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், மலையக மக்கள் முன்னணி தவிர்ந்த வேறு எந்தவொரு அமைப்பிற்கும் தாம் விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இல்லை என பதுளையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த் குமார் குறிப்பிட்டார்.