விபத்தில் தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்; இளைஞர் ஒருவர் பலி!

1595907417 Accident gelioya 2
1595907417 Accident gelioya 2

முல்லைத்தீவு முள்ளியவளை ஆலடி பகுதியில் இன்று (25.10.2020) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முள்ளியவளை நகர் பகுதியில் இருந்து முள்ளியவளை இரண்டாம் வட்டாரம் பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த நபர் முள்ளியவளை ஆலடி பகுதியில் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதுடன் இதன் போது குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் இரண்டாம் வட்டாரம் முள்ளியவளையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையாகிய 21 வயதுடைய மகேந்திரன் கவிஞ்ஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற முள்ளியவளை காவல்துறையினர் விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.