தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ஆயிரம் கிலோ மஞ்சள் பறிமுதல்!

fbgfb
fbgfb

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ஆயிரம் கிலோ மஞ்சள் கட்டி அடங்கிய 40 மூடைகளை நடுக்கடலில் வைத்து நாட்டுபடகுடன் மெரைன் காவல்துறையினர் இன்று திங்கட்கிழமை காலை பறிமுதல் செய்துள்ளனர்.

பாம்பன் பாலம் கடல் வழியாக வெளி மாவட்ட படகு ஒன்றில் இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக மண்டபம் மெரைன் ஆய்வாளர் கனகராஜ்க்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்

பாம்பன் வடக்கு கடற்கரையில் இன்று திங்கட்கிழமை காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பாம்பன் லைட்ஹவுஸ் அருகே நடுக்கடலில் உரிய பதிவு எண் இல்லாத நாட்டு படகு ஒன்று நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.

இதனை கண்ட மண்டபம் மெரைன் காவல்துறையினர் படகில் ஏறி சோதனை செய்தனர்.

அப்போது படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக மூட்டை மூட்டையாக மஞ்சள் படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததையடுத்தது நாட்டு படகை பாம்பன் வடக்கு கடற்கரைக்கு எடுத்து வந்து

மெரைன் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் நாட்டுபடகு தூத்துக்குடியை சேர்ந்தது எனவும் படகில் உள்ள ஆதார் அட்டை பாம்பன் சேதுபதி நகரை சேர்ந்தவர் உடையது எனவும் முதல் கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.