டாம் வீதி காவல்துறை நிலையத்தின் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படு்தப்பட்டுள்ளது.
காவல்துறை நிலையத்தின் உணவக கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த காவல்துறை நிலையத்தின் 12 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை நிலையத்தினுள் பிரவேசித்தல் மற்றும் வௌியேறுதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்குளி, சம்மந்திரணபுர பிரதேசம் நேற்று (26.10.2020) தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அநேகமானோர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.