நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து 73 பேர் இன்றைய தினம் தங்களுடைய தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய இலங்கையில் இதுவரை சுமார் 75 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 7530 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இதுவரை 58396 பேர் இதுவரை தனிமைப்படுத்தலினை நிறைவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.