வவுனியா காவல்துறையினரால் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம்!

police sticker 12
police sticker 12

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று (28) காலை 10மணிக்கு இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளிலும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

சரியான நேரத்தில் சரியாக முககவசம் அணிந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ள ஸ்டிக்கர்களே இவ்வாறு ஒட்டப்பட்டன. அத்துடன் பேருந்து நிலையம் மற்றும் பேருந்து என்பவற்றுக்கும் கிருமி நீக்கும் மருந்துகள் காவல்துறையினரால் விசிறப்பட்டன.

இந்நிகழ்வில் வவுனியா சிரேஸ்டகாவல்துறை அத்தியட்சகர் திஸ்சலால் த சில்வா, வவுனியா உதவி காவல்துறை அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே, வவுனியா காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி மானாவடு, வவுனியா போக்குவரத்து பிரிவு காவல்துறை பொறுப்பதிகாரி திஸாநாயக்கா மற்றும் காவல்துறை , இளைஞர் சேவைகள் மன்றத்தினர், சுகாதார திணைக்களத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.