நாளை முதல் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் !

57E455FB 8E33 4E37 8248 1CD0BCA7AB40
57E455FB 8E33 4E37 8248 1CD0BCA7AB40

நாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் சவேந்திர சில்வா இதனை கூறியுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், மேல் மாகாணத்தில் நாளை (ஒக்டோபர் 29) நள்ளிரவு முதல் நவம்பர் 2ம் திகதி அதிகாலை காலை 5 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்படும் என இராணுவ தளபதி தெரிவித்தார்.

அதேவேளை, மேல் மாகாணத்தில் ஏற்கனவே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.