நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரிற்கு வாக்களித்து தமிழர்கள் ஒருங்கிணைந்த கொள்கையுடன் ஒன்றுபட்டுள்ளனர் என்பதை உலகுக்கு காண்பிக்குமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் மக்களை காணாமல் ஆக்கிவிட்டு சிங்கள வேட்பாளர்கள் எந்த முகத்துடன் வாக்கு கேட்டு வருகிறார்கள், அவர்களுக்கு நாங்கள் வாக்களிக்கக் கூடாது எனவும் மீன் சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ் வேட்பாளருக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அத்துடன், கோத்தாபயவும், சஜித் பிரேமதாசவும் சமஷ்டி மற்றும் வடகிழக்கு இணைப்பிற்கு எதிரான சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள் என குறிப்பிட்டுள்ள அவர்கள், தமிழர்களின் அரசியல் விருப்பத்தை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் சர்வதேசத்துக்கு காட்டவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகியன தமிழர்களின் விருப்பத்தை தீர்க்கவேண்டும் என்று தமிழர்கள் விரும்பினால் இதனைச் செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.