பகுத்தறிவுள்ளவர்களிற்கு அத்தநாயக்கவின் தெரிவு

Attanayake
Attanayake

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பகுத்தறிவு மிக்கவர்களின் ஒரே தெரிவாக சஜித் பிரேமதாச அமைய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடை அக்குரல பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எமக்கு முன்னாள் உள்ள போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சஜித் பிரேமதாச இலகுவாக வெற்றி பெற முடியும் எனவும் அவர் தேர்தலில் களமிறங்கியமையினால் சிரேஷ்ட தலைவர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது எவரும் தேவையற்ற கேள்விகளை கேட்பதில்லை எனவும் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத பலரும் சஜித்தை ஜனாதிபதியாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அவரை வெற்றிபெற செய்து புதிய பயணம் ஒன்றை செல்வோம் என அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.