இந்நாட்டில் முதியோர்களிற்காக 2000 ரூபாய் முதியோர் தொகை வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் அதனை மேலும் 1000 ரூபாவினால் அதிகரித்து 3000 ரூபாய் வழங்கப்பட்டு அவர்களை பாரதுகாப்பதற்கா விசேட வேலைத்திட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ள சகல யோசனைகளையும் எதிர்வரும் 16 ஆம் திகதியின் பின்னர் இந்த மண்ணில் தான் நடைமுறைப்படுத்துவதாக பதுளையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.