ஈரானில் அதிகரித்தது கொரோனா உயிரிழப்புக்கள்!

images 4 2
images 4 2

ஈரானில் கொரோனா தொற்றுக்குள்ளான 415 பேர் இன்றைய நாளில் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளான அதிகளவானோர் உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என ஈரான் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, ஈரானில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 714ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 6 ஆயிரத்து 824 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம், ஈரானில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 58 ஆயிரத்து 648 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.