வீடுகளுக்குள் புகுந்த கடல் நீர்!

6464bb1c fd2d 41aa 83b3 0cbb5fd51558
6464bb1c fd2d 41aa 83b3 0cbb5fd51558

யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலகம் (சண்டிலிப்பாய்) பிரிவிற்குற்பட்ட கல்லுண்டாய்வெளியில் அமைக்கப்பட்டுள்ள குடியேற்றதிட்ட கிராமத்தில், வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடல் நீர் உள்நுழையாதவாறு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு அணையில் உடைப்பு ஏற்பட்டதனாலேயே கடல் நீர் கிராமத்திற்குள் உற்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு இன்றையதினம் மாவட்ட செயலக அதிகாரிகள், குறித்த திணைக்களத்தினர், இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் சென்று நிலைமைகளை அவதானித்துள்ள அதே வேளை அடுத்த கட்ட நடவடிக்கையினையும் ஆரம்பித்துள்ளனர்.

தற்போது உடைப்பு ஏற்பட்டுள்ள அணைக்கட்டினை தற்காலிகமாக புனரமைக்கும் நடவடிக்கையினை நீர்ப்பாசன திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.