நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவான மாவட்டங்கள்!

5e694437a3739.image
5e694437a3739.image

நேற்றைய தினம்(27.10.2020) இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 222 பேர் கம்பஹா மாவட்டத்தினுள் இனங்காணப்பட்டுள்ளதாக கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், 183 பேர் கொழும்பு மாவட்டத்தினுள் இனங்காணப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்திள் 16 தொற்றாளர்களும் மற்றும் நுவரெலியா மாவட்டத்தினுள் 10 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இரத்தினுபுரி மற்றும் பதுளை மாவட்டங்களில் தலா 5 பேரும், குருணாகலையில் மூவரும், காலியில் இரண்டு பேரும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தலா ஒருவருமாக இனங்காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 457 ஆகும்.