நாட்டில் நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்வரும் வாரத்திற்குள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது தொடர்பில் நாடாளுமன்ற குழுவின் விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் கட்சி தலைவர்களுக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதற்கமைய அடுத்த வாரத்தில் நான்கு நாட்கள் நாடாளுமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.