தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவர்களிடமிருந்து மூன்று வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதிப் காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 4 முதல் இதுவரையான காலப் பகுதியில் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 1,235 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 177 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.