சஜித்தினால் ஒருபோதும் இனவாதத்தை தோற்கடிக்க முடியாது

anura 1
anura 1

சஜித் பிரேமதாசவின் கூட்டின் கீழ் பிரிவினைவாதிகள் அதிகளவில் காணப்படுகின்றமையினால் அவரினால் ஒருபோதும் இனவாதத்தினை தோற்கடிக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பலாங்தொட்ட நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

எந்தவித பிரிவினைவாதிகளின் தொடர்பும் இல்லாமல் மக்கள் மத்தியில் செல்லக்கூடிய ஒரே ஒரு சக்தி தேசிய மக்கள் சக்தியாகும்.

நாம் கிழக்கில் கல்முனை, அக்கரைப்பற்று, கிண்ணியா, மூதூர், ஓட்டமாவடி, மட்டக்களப்பு போன்ற இடங்களுக்கு சென்று நாம் மக்களை சந்தித்தோம் அப்போது எந்த ஒரு பிரிவினைவதியினதோ, இனவாதியினதோ ஒத்துழைப்புடன் நாம் அங்கு செல்லவில்லை. ஆனால் சஜித்தினால் அவ்வாறு வடக்கு கிழக்கிற்கு செல்ல முடியாது.

பிரிவினைவாதத்தை தோற்கடிக்கும் ஒருவருக்கே தேசிய பாதுகாப்பையும், ஒற்றுமையும் உறுதிப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.