கோத்தாபயவின் வெற்றி நிச்சயம்

mahinda Gotabaya
mahinda Gotabaya

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்ததன் மூலம் கோத்தாபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோகாலை தொகுதி ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ ;

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இரட்டை சகோதரர்களை போன்றவர்கள் என தெரிவித்த அவர் கடந்த தேர்தலில் ஆட்சி அமைத்து எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ஜனாதிபதி தனக்கு வழங்கியதாகவும் எதிர்க் கட்சியில் இருந்துக்கொண்டு நாம் கட்சி ஒன்றை உருவாக்கினோம் என தெரிவித்தார்

பிரதேச சபை தேர்தல்களில் 71 சதவீத வெற்றியை பெற்றுக் கொண்டதாகவும் இரு கட்சியும் இணைந்து 70 சதவிகித வாக்குகளை பெற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.