திருகோணமலை பெண்கள் வலையமைப்பால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவி!

திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு (WNO) கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள கொரோனா தொற்றாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.

கொன்னறுவ, ரன்தம்பே, பெனிதெனிய, களுத்துறை, நிலாவல மற்றும் மாத்தறை ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 1500 பேருக்கு ரூபா 5 மில்லியன் பெறுமதியான உணவு, மருந்து மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ளனர்.

இவ்வமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் லொறி ஒன்றின் மூலமாக மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு பொருட்களை அனுப்பி வைத்தனர்.