வாழைச்சேனை சுகாதார பிரிவில் 16 உத்தியோகத்தர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை!

01 9 4
01 9 4

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்; சென்ற இடங்களுக்கு சென்றவர்களுக்கும், அரச உத்தியோகத்தர்களுக்கும் சுகாதார வைத்திய அதிகாரி டீ.எஸ்.சஞ்ஜீவ் தலைமையில் பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

01 7 6
01 7 6

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எவருக்கும் கொரோணா தொற்று இல்லாத சந்தர்ப்பத்திலும் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மொத்தம் 29 நபர்களுக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கோறளைப்பற்று வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உள்ளவர்கள் கொரோனா தொற்றாளர்கள் சென்ற இடங்களில் கடமையாற்றியவர்கள், பழகியவர்கள் விபரங்கள் திரட்டப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

01 2 5
01 2 5

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை வாழைச்சேனை துறைமுகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், காவல்துறை உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை போக்குவரத்து சபை ஊழியர்கள், தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் என பதினாறு பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்று, இதன் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டீ.எஸ்.சஞ்ஜீவ்; தெரிவித்தார்.

01 5 5
01 5 5

குறித்த பி.சி.ஆர். பரிசோதனை நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் டீ.எஸ்.சஞ்ஜீவ், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

01 5 4
01 5 4