பூரண குணமடைந்தோர் எண்ணிக்கை 67 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 67 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 4142 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.