வறுமையிலுள்ள குடும்பங்களுக்கு தொழில்வாய்ப்புக்கள்!

kotabaya
kotabaya

வறுமையில் கஷ்டப்படுகின்ற குடும்பங்களிற்கு அரச தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொலனறுவை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

குறைந்த வருமானம் பெறுவோர், சமுர்த்தி பெறுபவர்கள், சமுர்த்தி கிடைக்காதவர்கள், வருமானம் அற்றவர்கள், நாளாந்தம் உழைக்கும் தொழிலாளர்கள், அங்கவீனர்கள் மற்றும் நோயாளர்களுக்காக மாதந்தோறும் நிவாரணப் பொதியை இலவசமாக வழங்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.

அரச நிறுவனங்களில், பாடசாலைகளில், உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் நிலவும் சுமார் ஒரு இலட்சம் நிபுணத்துவம் அவசியமற்ற தொழில் வாய்ப்புக்களை கஷ்டப்படும் குடும்பங்களுக்கு தலா ஒரு தொழில்வாய்ப்பு வீதம் அரச தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.