இலங்கை விமான படைக்கு புதிய தளபதி நியமனம்!

இலங்கையின் 18வது விமானப் படைத்தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரன ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய விமானப் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சுதர்ஷன பத்திரன எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.

2019 மே மாதம் 29 ஆம் திகதி இலங்கையின் 17வது விமானப் படை தளபதியாக நியமிக்கப்பட்ட சுமங்கள டயஸ் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளார்.

இந் நிலையிலேயே அந்தப் பதவிக்கு சுதர்ஷன பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை 36 வருட சேவையை நிறைவுசெய்த ஓய்வுபெறவுள்ள விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

இதன்போது தாய்நாட்டுக்காக செய்த பணிகளை பாராட்டிய ஜனாதிபதி, சுமங்கள டயஸ்ஸின் ஓய்வுகால வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.