மஹிந்தவிற்கு பகிரங்க சவால் விடுக்கும் சஜித்

mahinda sajith
mahinda sajith

பிள்ளையாள், வரதராஜப்பெருமாள், கருணா அம்மான் மற்றும் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோருடனான இரகசிய கொடுக்கல் வாங்கல்கள் பற்றி தெளிவுபடுத்துமாறு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சவால் விடுத்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் பின்வரும் விடயங்களை தெளிவுபடுத்துமாறு சஜித் பிரேமதாசவினால் கோரப்பட்டுள்ளது.

  • கொலைக் குற்றச்சாட்டில் சிறையிலுள்ள பிள்ளையானை விடுவித்தல்.
  • சட்டவிரோதமாக ஈழத்தை அறிவித்து, ஈழக்கொடியை ஏற்றிய வரதராஜப்பெருமாளின் ஆதரவு.
  • 600 பொலிஸ் அதிகாரிகளைக் கொலை செய்த, தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதல் நடத்திய, அரந்தலாவை கொலையை செய்த கருணா அம்மானின் ஆதரவு.
  • ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதியாகக் கூறப்பட்ட எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இரண்டாவது விருப்பு வாக்கை சகோதரருக்கு அளிக்குமாறு கோரியுள்ளமை.

இவர்களின் ஆதரவினை பெற்றுக்கொள்வதற்கு எவ்வாறான வாக்குறுதிகள் வழங்கப்பட்டது, அவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இரகசிய உடண்படிக்கைகள் பற்றி தெளிவுபடுத்துமாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.