அனுமதி பெறாத ஊடகங்கள் – ஆணைக்குழு அறிவிப்பு

50 fdf
50 fdf

தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து அனுமதி பெறப்படாத எந்தவொரு ஊடகத்துக்கும் உத்தியோகப்பற்றற்ற தேர்தல் முடிவுகளை ஒலி/ஒளிபரப்புச் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை இலத்திரணியில் ஊடகங்கள் மூலம் ஒலி/ஒளிபரப்புச் செய்ய தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து சட்டபூர்வமாக அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே இதனைக் கூறியுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் அத்தாட்சிப்படுத்திய தேர்தல் முடிவுகளை வழங்குவதற்கு அவசியமான வசதிகளை வழங்குமாறு அரசாங்கத் தகவல் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.