போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 98 பேர் கைது

kaithu

கடந்த 24 மணித்தியாலங்களில் மேல்மாகாணத்தில் காவற்துறையினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 42 பேர் கைது செய்யப்பட்டதோடு, குறித்த சந்தேக நபர்களிடமிருந்து மொத்தமாக 25 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பேலியகொடை காவற்துறை பிரிவில் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் ஜீப் ரப வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.