மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி பிரதேசத்தில் துப்பாக்கி, வாள் மீட்பு!

மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள சவுக்கடி பிரதேசத்தில் பற்றையில் இருந்து உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்று (30) மாவட்ட குற்றவியல் பிரிவு காவல்துறையினரால் மீட்கப்பட்டதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மாவட்ட குற்றவியல் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து மாவட்ட குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி. டி.எஸ்.டி. பண்டார தலைமையில் காவல்துறை சாஜன் அஜித், சுதிமில்சன், பண்டார, சந்தன,  விஜயசிங்க ஆகியோர் கொண்ட காவல்துறை குழுவினர் குறித்த பகுதியை சுற்றி சோதனையிட்டனர்.

இதன்போது அங்கு பற்றை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  உள்ளூர் தயாரிப்பு துப்பாகி ஒன்றும் வாள் ஒன்றையும் மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்றவியல் பிரிவு காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.