மேலும் 140 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைவு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 140 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் இதுவரையில் மொத்தமாக 4,282 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.