எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்திருக்கும்

download 38
download 38

மேல் மாகாணத்தில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதிலும், அரச சேவை, பாதுகாப்பு சேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அல்லது திணைக்களங்கள் என்பவற்றுக்கு எரிபொருள் வழங்கும் சேவைக்காக கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களில் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களை திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பில் 62 , கம்பஹாவில் 68 மற்றும் களுத்துறையில் 27 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திறந்து வைக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் குறித்த மேலதிக தவல்களை www.ceypetco.gov.lk என்ற இணைய தளத்திற்குள் பிரவேசித்து தெரிந்து கொள்ள முடியும்.

இது தொடர்பில் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக  அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.