கொழும்பில் காற்று மாசு குறைவடைந்துள்ளது

colombo1
colombo1

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் வளிமண்டலத்தில் அதிகரித்த தூசு துகள்களின் செறிவு சுட்டி தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி தூசு துகள்களின் செறிவு சுட்டி 148 ஆக காணப்பட்டிருந்த நிலையில் தற்போது தூசு துகள்களின் செறிவு சுட்டி 50 ஆக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய நாடுகள் சிலவற்றில் தற்போது வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு சுட்டி அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.