தபால் திணைக்களத்தினால் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்றுடன் (Nov.09) நிறைவடைவதாகவும் இன்றும் வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் தமது ஆள் அடையாளத்தை தெரிவித்து அருகிலுள்ள தபாலகத்துக்குச் சென்று அதனைப் பெற்றுக் கொள்ளுமாறு தபால் மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இதுவரையில் வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் தங்களது வீடுகளில் இருந்து தபாலில் வரும் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள தயாராகுமாறும் அவர் கேட்டுள்ளார்.
இதுவரையில் 85 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.