தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறியோருக்கு தண்டனை என்ன தெரியுமா !

18796 2
18796 2

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்கு கம்பஹா நீர்கொழும்பு மற்றும் பாணந்துரை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கைளின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

முகக் கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்ட நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட நபர்களுக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் உட்பட 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் கடந்த 15 ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது