இலங்கை வந்தடைந்த சீனா தொழில் நுட்பவியலாளர்கள்!

இலங்கையில் பழுதடைந்துள்ள பி.சி.ஆர் இயந்திரத்தை திருத்துவதற்காக சீனாவிலிருந்து தொழில் நுட்பவியலாளர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் தற்போது பழுதடைந்த நிலையில் காணப்படுகின்ற பி.சி.ஆர் இயந்திரத்தை தயாரித்துள்ள நிறுவனத்தை சேர்ந்தவர்களே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

பி.சி.ஆர் சோதனை நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கொழும்பிற்கு இரவு வந்துசேர்ந்துள்ளனர் என இலங்கைக்கான சீன தூதரகம் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

இயந்திரம் பழுதடைந்தமைக்காக காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.