அடுத்த 15 ஆண்டுகளுக்கு சீனாவின் ஜனாதிபதியாக ஷி ஜின்பிங்!

அண்மையில் இடம்பெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்த மாநாட்டில் அந் நாட்டின் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் (Xi Jinping) அடுத்த 15 ஆண்டுகளுக்கு சீனாவின் ஜனாதிபதியாக தொடர்ந்தும் பதவி வகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மாநாட்டில் 2035 ஆம் ஆண்டு வரைக்குமான சீனாவுக்கான வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து ஷி ஜின்பிங் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந் நிலையில் 4 நாட்களாக நடைபெற்ற குறித்த மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் மத்தியகுழு உறுப்பினர்கள் ஜின்பிங்கின் செயற்பாடுகளை மதிப்பிட்டனர்.

இதையடுத்து அவர் அடுத்த 15 ஆண்டுகளுக்கு சீனாவின் ஜனாதிபதியாக தொடர்ந்து பதவி வகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.