தொழிலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

1604153940 death 2
1604153940 death 2

கிளிநொச்சி நாச்சிக்குடாவில் கடல் தொழிலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (31.10.2020) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாச்சிக்குடா கடல்பரப்பில் களங்கட்டி பணியில் ஈடுபட்டிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் நீரில் மூழ்கிய நிலையில் மீனவர்களின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வந்ததுடன் முழங்காவில் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த 25 வயதுடைய யோனகன் என்ற 3 மாத குழந்தை ஒன்றின் தந்தையாவார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை நாச்சிக்குடா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.