இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 308 பேருக்கு கொ​ரோனா பரிசோதனை!

202004241656205226 Tamil News Coronavirus PCR test intensity 1000 people checkup daily in SECVPF 2
202004241656205226 Tamil News Coronavirus PCR test intensity 1000 people checkup daily in SECVPF 2

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 308 பேருக்கு கொ​ரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இன்றைய பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் புதிதாக கொ​ரோனா தொற்று ஒவருக்கும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்றைய பரிசோதனையில் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் இருக்கின்ற 8 பேருக்கு தொடர்ந்தும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தென்பகுதியை சேர்ந்தவர்கள் தற்போது மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 11 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு இன்னும் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.