கடந்த 2005 ஆம் ஆண்டு ரோயல் பார்க் வீட்டுத் தொகுதியில் 19 வயது யுவதியொருவரின் கொலை தொடர்பில் குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை கைதியாகியிருந்த சிரமந்த ஜூட் அன்டணி ஜயமகா என்பவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றவாளிக்கு உயர் நீதிமன்றத்தினால் கடந்த 2012 ஆம் ஆண்டு மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியான ஜூட் அன்டணி குருவிட்ட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்கப் பெற்றதன் பின்னர் அவர் கடந்த வெள்ளிக்கிழமை
(Nov.09) சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.