தமிழ்ப் பிரதேச செயலகங்களை நிறுவுவதற்கு பிரதமர் இணக்கம்

pm ranil
pm ranil

அம்பாறை மாவட்டத்தில் நீண்டகால தேவையாகவிருந்து வந்த மூன்று தமிழ்ப் பிரதேச செயலகங்களை நிறுவுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரசிங்க இணக்கம் தெரிவித்துள்ளாரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன் தலைமையிலான குழுவொன்று கொழும்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த வேளையில் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.