வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நில அபகரிப்பு குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை!

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நில அபகரிப்பு குறித்து விசாரணை நடத்த சட்டமா அதிபர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்க ஒரு குழுவால் வெளி நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் நிலங்களை வலுக்கட்டாயமாகப்பறிமுதல் செய்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரிக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா காவல்துறை கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

போலி பத்திரம் தயாரித்து விற்கப்பட்டுள்ளன என்றும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.