கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம்: இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்!

Jeevan Thondaman 011
Jeevan Thondaman 011

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

புஸ்ஸலாவ – புரொட்டப் பிரிவுக்கான வீதியினை அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவ்வாறு குறிப்பிட்டார்.