நாட்டில் மீண்டும் அதிகரித்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை !

நாட்டில் மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக பதிவாகியுள்ளது.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணிகளில் 121 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 43 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 11 ஆயிரத்து 224 பேரில் 5,953 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5249 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.