தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 180 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இக் காலப் பகுதியில் 25 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதிப் காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 1,992 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 307 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேநேரம் கடந்த நான்கு நாட்களில் முகக் கவசம் அணியத் தவறியமை மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுகளுக்காக 73 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.