இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகம் வடமராட்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது
அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அலுவலகமாக இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
யாழ் வடமராட்சி அல்வாய் பகுதியிலேயே அமைக்கப்பட்ட இந் அலுவலகத்தின் பெயர்ப் பலகையை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திரைநீக்கம் செய்து வைத்து அலுவலகத்தையும் நாடாவெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இத் திறப்பு விழா நிகழ்வில் வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.