ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதே தனது இராஜினாமாக் கடிதத்தை எழுதி வைத்துள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத்தேர்தலை நடத்த முடியாமல் போனால் தனது பதவியினை இராஜினாமா செய்யவுள்ளதாகவும் இந்த தேர்தலின் பின்னர் எந்தவொரு தேர்தலுக்கும் தான் தலைமை வகிக்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.