கொரோனா தொற்றை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்கு உயிரையும் தியாகம் செய்யத்தயார் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் (03) உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று இல்லாதொழியும் என்றால் அதற்கும் தாம் தயார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆசீர்வதிக்கப்பட்ட நீர் கொண்ட குடமொன்றை கங்கையில் விட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சுகாதார அமைச்சர் தாம், கொரோனாவை ஒழிப்பதற்கு எந்தவிதமான தியாகத்தையும் செய்யத் தயார் என நாடாளுமன்றில் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.