பிரான்ஸில் கிறித்தவ தேவாலயங்களுக்கு இராணுவ பாதுகாப்பு!

பிரான்ஸில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் கத்திக்குத்து தாக்குதல்கள் காரணமாக அங்குள்ள கிறித்தவ தேவாலயங்களுக்கு இராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நபிகள் நாயகத்தின் கேலி சித்திரம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு பல்வேறு நாடுகளில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பிரான்ஸில் இதுவரை 3 பாதிரியார்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நாட்டிலுள்ள அனைத்து கிறித்தவ தேவாலயங்களுக்கும் இராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.