நல்லாட்சி அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டுள்ள தமது ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த அபிவிருத்தி பணிகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, பெரியபோரதீவில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், சந்திரகுமார் ஆகியோர் உட்பட கோத்தாபயவின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.